News March 13, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(மார்ச் 13) காலை 10 மணிக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு திருக்கோவில் பணியாளர்களுக்கு அரசு ஆணைப்படி ஊதிய நிர்ணயம் செய்து வழங்க நிர்வாகத்தை கண்டித்து சுசீந்திரம் திருக்கோவில் அலுவலகம் முன்பு தொடர் தர்ணா போராட்டம் நடக்கிறது.

Similar News

News March 14, 2025

மகளின் கழுத்தை அறுத்த தாய் மீது வழக்கு

image

நெய்யூரைச் சேர்ந்தவர் விஜிலின் சாம் (44). இவர் மனைவி மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர். இந்நிலையில் அவர் அவரது மகள் விஜோலின் தீபா கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக இரணியல் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 13, 2025

குமரியில் டாட்டூ குத்திய 6 பேருக்கு எச். ஐ.வி பாதிப்பு

image

குமரி மாவட்டத்தில் டாட்டூ எனும் பச்சை குத்துவதால் தோல் நோய்கள் அதிகரித்துள்ளது என்றும் கடந்த 2 ஆண்டுகளில் 6 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் மாதம் 30 பேர் டாட்டூவினால் ஏற்படும் பிரச்சனைக்காக வருகின்றனர் என ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையின் தோல் நோய் மருத்துவ பிரிவு பேராசிரியர் பிரேம் சாந்த் தெரிவித்துள்ளார்.*தெரிந்தவர்களுக்கு பகீர்ந்து உஷார் படுத்தவும்*

News March 13, 2025

நாகர்கோவில்: 52 வார்டுகளில் குழந்தைகள் பாதுகாப்பு குழு!

image

நாகர்கோவில் மாநகரில் 52 வார்டுகளிலும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவில் செவிலியர், சமூக ஆர்வலர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், மகளிர் சுய உதவி குழுவினர் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஆகியோர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!