News December 5, 2024
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

#இன்று(டிச.,5) காலை 9 மணிக்கு கீரிப் பாறையில் தொழிலாளர்கள் மருத்துவர் நியமிக்க கோரி 10வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம். #காலை 9.30 மணிக்கு ஜெயலலிதா 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.#காலை 10 மணிக்கு CPIM சார்பில் குளப்புரம் ஊராட்சி அலுவலகம் முன்பு ஊராட்சித் தலைவரை கண்டித்து சத்தியாகிரக போராட்டம்.
Similar News
News January 2, 2026
குமரி: போலீஸ் பெயரில் மோசடி.. மக்களே உஷார்!

குமரி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், குமரியில் காவல்துறை அதிகாரிகளின் பெயரையோ (அ) அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை காட்டியோ, வேறு வகையில் தொடர்பில் இருப்பதாக கூறி யாரேனும் மோசடியில் ஈடுபட்டாலோ (அ) தவறாக பயன்படுத்தினாலோ கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இது சம்பந்தமாக தகவல் தெரிந்தால் பொதுமக்கள் போலீஸ் எஸ்.பி-யின் வாட்சப் எண்ணிற்கு (81222 23319) புகார் அளிக்கலாம்.
News January 2, 2026
குமரி: 14,797 காலியிடங்கள்… APPLY NOW

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜன.10ம் தேதி நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெறுகிறது. இம்முகாமில் 8, 10, 12th, டிப்ளமோ, ITI, டிகிரி படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். 146 நிறுவனங்களில் 14,797 காலியிடங்கள் உள்ளது. வேலைதேடுவோர் tnprivatejobs.tn.gov.in என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும். தொடர்புக்கு – 8270865957, 7904715820, 9994605549. SHARE பண்ணுங்க.
News January 2, 2026
குமரி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்த தம்பதி செந்தில் – சந்தியா (25). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளாகிறது. கணவன் – மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. டிச.31ம் தேதி இரவும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த சந்தியா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் தொடர்கிறது.


