News October 25, 2024
கன்னியாகுமரி மக்களுக்கு MLA வேண்டுகோள்

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முழு கொள்ளளவை எட்டியுள்ள பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது ஆகவே தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் MLA வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News January 3, 2026
குமரி: ஆன்லைன் பண மோசடியால் வங்கி கணக்குகள் முடக்கம்..

குமரியில் பண மோசடி தொடர்பாக 2,89,83,656 ரூபாய் மோசடி நபர்களின் வங்கி கணக்குகள் சைபர் கிரைம் போலீசாரால் முடக்கப்பட்டுள்ளது. அதில் 1,53,29,516 ரூபாய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு திரும்ப பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பொது அமைதியை கெடுக்கும் வகையில் அவதூறு பரப்புவோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குமரி காவல்துறை தெரிவித்துள்ளது.
News January 3, 2026
குமரி: 12th படித்தால் ஆதார் துறையில் வேலை ரெடி!

குமரி மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <
News January 3, 2026
குமரி: குளத்தில் மிதந்த ஆண் சடலம்…

காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (70). இவர் கடந்த 31-ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவர் வேலைக்கு சென்று இருக்கலாம் என்று வீட்டில் உள்ளவர்கள் நினைத்த நிலையில் நேற்று (ஜன.2) அவரது உடல் அந்தப் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மிதந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


