News May 16, 2024
கன்னியாகுமரி: குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கடல் அணையிலிருந்து கிராம புற பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், நாவல்காடு மற்றும் புத்தேரி ஆகிய கிராமங்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேற்று இரவு முதல் முக்கடல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் இன்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News December 19, 2025
குமரி: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள் <
News December 19, 2025
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி

குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஓவியப்போட்டி குமரி மாவட்ட காவல்துறை சார்பில் நடத்தப்படுகிறது. ரூ.15000, ரூ.10000, ரூ7500 என பரிசுகள் வழங்கப்படுகிறது. ஓவியத்தை ஜன.5.ம் தேதிக்குள் நாகர்கோவில், குமரி, தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல் ஆகிய போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கலாம் என குமரி மாவட்ட எஸ்.பி தகவல் தொிவித்துள்ளார்.
News December 19, 2025
ரேஷன் கார்டு தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை தயார்

பொங்கல் பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்தில் 5.35 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. இவை சென்னையிலிருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு கோணத்தில் உள்ள குடோனில் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள 804 ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. பொங்கலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக வேட்டி, சேலை வழங்க அரசு உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


