News May 16, 2024
கன்னியாகுமரி: குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கடல் அணையிலிருந்து கிராம புற பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், நாவல்காடு மற்றும் புத்தேரி ஆகிய கிராமங்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேற்று இரவு முதல் முக்கடல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் இன்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News December 20, 2025
குமரி: மாணவி குளிப்பதை படம் எடுக்க முயன்ற தொழிலதிபர்

மிடாலம் பகுதியை சேர்ந்த +1 மாணவி தனது பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். 2 நாட்களுக்கு முன்பு மாணவி குளியலறையில் குளிக்கும்போது அப்பகுதி தொழிலதிபர் கில்பர்ட் மறைந்து நின்று செல்போனில் படம் எடுக்க முயலவும் மாணவி செல்போனை பிடுங்கினார். மாணவி சத்தம் போடவே கில்பர்ட் வீட்டிலிருந்து தப்பி ஓடினார். குளச்சல் போலீசார் போக்சோ சட்டத்தில் தொழிலதிபர் மீது வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.
News December 20, 2025
குமரி : இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 20, 2025
குமரி: மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் சஸ்பெண்ட்

குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (58). இவர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் அங்குள்ள 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக வந்த புகாரை அடுத்து அவர் மீது பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர். மேலும், கல்வித்துறை அதிகாரிகள் சுந்தர்ராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.


