News April 29, 2025

கன்னியாகுமரி: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 30.04.2025 அன்று பிற்பகல் 04.00 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் மாவட்ட முகவரிப் பட்டியலில் உள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Similar News

News November 27, 2025

குமரி: 8-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

image

களியக்காவிளை அருகே காரக்கோணத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். மாணவன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு வந்த நிலையில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வெள்ளறடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

News November 27, 2025

நீர்வளத்துறை அலுவலகத்தில் மரங்கள் ஏலம் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் செருப்பலூர் கிராமத்தில் நீர்வளத்துறை அலுவலகத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான மரங்கள் குறித்த ஏல அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தேக்கு மரம் 33, அயனி மரம் 3, பலாமரம் 2, மாமரம் 7, புளிய மரம் 2, வாதுமை மரம் 1 மற்றும் வாகை மரம் 1 ஆகியவை ஏலம் விடப்பட இருக்கிறது. ஏலம் டிச. 9 அன்று நடைபெற உள்ள நிலையில் விருப்பமுள்ளவர்கள் டிச.8 க்குள் பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

News November 27, 2025

நீர்வளத்துறை அலுவலகத்தில் மரங்கள் ஏலம் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் செருப்பலூர் கிராமத்தில் நீர்வளத்துறை அலுவலகத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான மரங்கள் குறித்த ஏல அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தேக்கு மரம் 33, அயனி மரம் 3, பலாமரம் 2, மாமரம் 7, புளிய மரம் 2, வாதுமை மரம் 1 மற்றும் வாகை மரம் 1 ஆகியவை ஏலம் விடப்பட இருக்கிறது. ஏலம் டிச. 9 அன்று நடைபெற உள்ள நிலையில் விருப்பமுள்ளவர்கள் டிச.8 க்குள் பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!