News April 29, 2025
கன்னியாகுமரி: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 30.04.2025 அன்று பிற்பகல் 04.00 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் மாவட்ட முகவரிப் பட்டியலில் உள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
Similar News
News October 22, 2025
குமரி: கடன் கேட்டு போராட்டம் நடத்திய வாலிபர்

குமரி, கிராத்தூர் பகுதி பட்டதாரி சுஜின்(35) கிராத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.10,000 கடன் கேட்டுள்ளார். அங்கிருந்த செயலாளர் சுஜினின் உறுப்பினர் சேர்க்கை அங்கீகரிகபடவில்லை எனக்கூறி திருப்பி அனுப்பினார். இதனால் சுஜின் நேற்று (அக்.21) கூட்டுறவு அலுவலகம் முன்பு பதாகையுடன் கடன் கேட்டு போராட்டம் நடத்தினார். நித்திரவிளை போலீசார் சுஜினை காரில் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று எச்சரித்தனர்.
News October 22, 2025
குமரியில் கோடிகளை தாண்டி மது விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 18, 19 மற்றும் 20 ஆகிய 3 நாட்கள் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் மதுக்கடைகளில் மதுபானங்கள் விற்பனை அதிகமாக இருந்தது.18-ந் தேதி ரூ.4 கோடியே 21 லட்சத்து 92 ஆயிரத்து 910-க்கும், 19-ந் தேதி ரூ.5 கோடியே 50 லட்சத்து 59 ஆயிரத்து 90-க்கும் விற்பனை ஆனது. தீபாவளி அன்று ரூ.4 கோடியே 44 லட்சத்து 24 ஆயிரத்து 760-க்கு மதுபானங்கள் விற்பனையானது.
News October 22, 2025
குமரி: வெள்ளத்தில் செல்பி எடுக்க வேண்டாம் – ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்”: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் நீர் நிலைப்பகுதிகளான வாய்க்கால்கள், ஓடைகள், குளங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தாழ்வான பகுதிகளில் பாயும் வெள்ளத்தினை வேடிக்கை பார்க்கவோ செல்பி எடுக்கவோ,கால்களை நனைக்கவோ துணி துவைக்கவோ வேண்டாம் என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.