News August 16, 2024
கனரக லாரிகள் செல்ல கட்டுப்பாடு விதிப்பு

தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு அதிகளவிலான கனரக லாரிகள் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 முதல் மாலை 3 மணி வரை, இரவு 10 முதல் காலை 6 மணி வரை, சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை கனரக லாரிகள் செல்ல கட்டுப்பாடு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
தென்காசியில் ஆட்சியர் ஆய்வு

தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அரசுத்துறை அலுவலர்களும் உடனிருந்தனர். இந்த ஆய்வு, திட்டங்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வதாக உள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
News September 18, 2025
தென்காசி: கழிவுநீர் வாறுகாலில் கிடந்த ஆண் சடலம்

தென்காசி நகராட்சிக்குட்பட்ட மையபகுதியான போஸ்ட் ஆபீஸ் எதிர்ப்புறம் பழைய பரதன் தியேட்டர் அருகே உள்ள கழிவுநீர் வாறுகாலில் ஆண் சடலம் மிதந்தது. இறந்த நபர் யார்? கொலையா தற்கொலையா என சிசிடிவி காட்சிகள் கொண்டு தென்காசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி காணபட்டது.
News September 18, 2025
தென்காசி: EXAM இல்லா அரசு வேலை – APPLY….!

தென்காசி மக்களே தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் இங்கே<