News March 17, 2025
கனடா அமைச்சரவையில் கோவை பூர்வீகமாக கொண்ட பெண்

கனடா புதிய பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் கோவையை பூர்வீகமாக கொண்ட பெண் அனிதா ஆனந்த் இடம் பெற்றுள்ளார். இவர் கனடாவின் அறிவியல் மற்றும் தொழில்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அனிதாவின் தந்தைவழி தாத்தா கோவை வெள்ளலூர் அன்னசாமி சுந்தரம் ஆவார். இவர் மகாத்மா காந்தியுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். கோவைக்கு பெருமை சேர்த்த அனிதா-க்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.
Similar News
News March 18, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (18.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 18, 2025
கோவை: நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி!

கோவை கருமத்தம்பட்டி, செந்தில்நகரில் வசிப்பவர்கள் கமலக்கண்ணன்-மீனா தம்பதி. இவர்களது 2 வயது மகன் சிரஞ்சீவி விக்ரம், நேற்று இரவு முதல் காணவில்லை என கூறப்படுகிறது. பின்னர் இன்று காலை வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் பார்த்தபோது, சிரஞ்சீவி நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News March 18, 2025
கோவையில் 200க்கும் அதிகமான விபத்துக்கள்

கோவை மாநகரில் ஜனவரி 1 முதல் மார்ச் 15ஆம் தேதி வரை, கோவை மாநகரில் 200க்கும் அதிகமான வாகன விபத்துக்கள் நடைபெற்றுள்ளது என தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த 2.5 மாத காலத்தில் நடைபெற்ற 249 விபத்துக்களில், 55 விபத்துக்கள் மிகவும் ஆபத்தான விபத்துகளாக இருந்துள்ளது. இதனால் இப்போது வரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். 223 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.