News November 25, 2024
கந்தர்வகோட்டை அருகே சரக்கு வாகனம் மோதி சிறுவன் பலி

கந்தர்வகோட்டை பெரிய கோட்டையை சேர்ந்தவர் கலைச்செல்வன் இவரது மகன் 4 வயது ஆண் குழந்தை நேற்று மதியம் 12 மணியளவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார் வீரடிப்பட்டி சேர்ந்த சரவணன் ஓட்டி வந்த மகேந்திரா பொலிரோ வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சாய்பிரணவ் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
புதுகை: ஆடு, கோழி பண்ணை அமைக்க வேண்டுமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News December 7, 2025
புதுகை: ரூ 11.13 கோடியில் நலத்திட்ட உதவிகள்

புதுகையில் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி நேற்று நடந்த அரசு விழாவில் 4535 பயனாளிகளுக்கு ரூ11.13 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.அருணா வழங்கினார். சென்னையில் முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை தொடங்கி வைத்தபிறகு நடந்த இந்த விழாவில் டிஆர்ஓ அ.கோ.ராஜராஜன், எம்எல்ஏக்கள் வை.முத்துராஜா, எம்.சின்னத்துரை, மாநகராட்சி மேயர் செ.திலகவதி, துணை மேயர் எம்.லியாகத்அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
News December 7, 2025
புதுகை: மது போதையில் அட்டூழியம்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் லட்சுமி தியேட்டர் அருகே பாண்டி (23) என்பவர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கீரனூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு அவரை பிணையில் விடுவித்தனர்.


