News November 25, 2024

கந்தர்வகோட்டை அருகே சரக்கு வாகனம் மோதி சிறுவன் பலி

image

கந்தர்வகோட்டை பெரிய கோட்டையை சேர்ந்தவர் கலைச்செல்வன் இவரது மகன் 4 வயது ஆண் குழந்தை நேற்று மதியம் 12 மணியளவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார் வீரடிப்பட்டி சேர்ந்த சரவணன் ஓட்டி வந்த மகேந்திரா பொலிரோ வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சாய்பிரணவ் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 16, 2025

புதுகை: முதல்வரை சந்தித்த ஒன்றிய செயலாளர்

image

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் உடன்பிறப்பே வா என்ற நிகழ்வின் மூலம் திமுக நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடி வருகிறார். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சாமிநாதன் உடன் பிறப்பே வா என்ற நிகழ்வில் கலந்து கொண்டு, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உடன் அவருடைய தொகுதி பற்றி கலந்துரையாடினார்.

News November 16, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 15, 2025

ஆலங்குடி: பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்

image

ஆலங்குடி அரசு மருத்துவமனை எதிரே தியாகராஜன் என்பவருடைய கடலை மில் பகுதியில் திடீரென பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. உடனடியாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆலங்குடி தீயணைப்பு துறையினர் தகவல் அளித்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி பாம்பை லாவகமாக பிடித்தனர். அதன் பிறகு பிடிபட்ட பாம்பை வனப்பகுதிகள் துறையினர் பத்திரமாக விட்டனர்.

error: Content is protected !!