News November 25, 2024
கந்தர்வகோட்டை அருகே சரக்கு வாகனம் மோதி சிறுவன் பலி

கந்தர்வகோட்டை பெரிய கோட்டையை சேர்ந்தவர் கலைச்செல்வன் இவரது மகன் 4 வயது ஆண் குழந்தை நேற்று மதியம் 12 மணியளவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார் வீரடிப்பட்டி சேர்ந்த சரவணன் ஓட்டி வந்த மகேந்திரா பொலிரோ வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சாய்பிரணவ் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 21, 2025
புதுகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

புதுகை மாவட்டத்தில் இதுவரை 15 நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்து முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒரு முகாமிற்கு சராசரியாக 1400-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். இதுவரை 22,313 பேர் மருத்துவ பயன் அடைந்துள்ளனர். இம் முகாமில் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், கிட்னி செயல்பாடு, இருதயம் சம்பந்தப்பட்ட நோய் கண்டறிதல், செய்து பயன்பெற்றுள்ளதாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
புதுகை: மனக்கசப்பு காரணமாக கணவன் தற்கொலை

அன்னவாசல் அடுத்த மருதாந்தளையை சேர்ந்தவர் ஆறுமுகம் (39), இவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட குடும்பச் சண்டை காரணமாக, அவரது மனைவி அவரது தந்தை வீட்டில் 6 மாதமாக வசித்து வருகிறார். இதையடுத்து மன உளைச்சலில் இருந்த ஆறுமுகம், மருதாந்தளையில் உள்ள அவரது இல்லத்தில், கயிற்றில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 21, 2025
புதுகை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் (நவம்பர் 20) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள். இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


