News August 15, 2024

கத்தியால் குத்தி விட்டு தப்பியோட்டம்

image

புதுச்சேரி சோதனைக்குப்பம் ஐயனார் கோவில் வீதியை சேர்ந்தவர் இளங்கோவன். பால் வியாபாரி. இவர் நேற்று அதிகாலை 1 மணியளவில் புதுவை காந்தி சிலை பின்புறம் அமர்ந்திருந்தார். அங்கு சுற்றித்திரியும் வேலு, குரு, சதீஷ் ஆகியோர் இளங்கோவனின் செல்போனை பறித்துக் கொண்டு கத்தியால் தோள் பட்டையில் குத்தி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பெரியக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News

News September 18, 2025

அரசு ஊழியர் கோப்பு தேக்கினால் ஒருநாளைக்கு ரூ.250 அபராதம்!

image

புதுச்சேரியில், அரசு கோப்புகளை தாமதப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இனி, உரிய காரணமின்றி குறிப்பிட்ட காலத்திற்கு மேல் கோப்புகளை தேக்கி வைத்தால், நாள் ஒன்றுக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்படும். இதன்மூலம், நிர்வாகத்தில் தாமதங்கள் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 18, 2025

செப்.25ல் சர்வதேவ மருத்துவர்கள் மாநாடு துவக்கம்!

image

புதுச்சேரியில் சர்வதேச அளவிலான மருத்துவர்கள் மாநாடு வருகின்ற 25-ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. விநாயகர் மிஷன் மருத்துவமனையின் டாக்டர் நவீன் இத்தகவலைத் தெரிவித்தார். இந்த மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டு, 350-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளனர். இதையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் நடக்கிறது.

News September 18, 2025

புதுச்சேரி: ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ?

image

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம்.<> myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid <<>>என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!