News August 15, 2024
கத்தியால் குத்தி விட்டு தப்பியோட்டம்

புதுச்சேரி சோதனைக்குப்பம் ஐயனார் கோவில் வீதியை சேர்ந்தவர் இளங்கோவன். பால் வியாபாரி. இவர் நேற்று அதிகாலை 1 மணியளவில் புதுவை காந்தி சிலை பின்புறம் அமர்ந்திருந்தார். அங்கு சுற்றித்திரியும் வேலு, குரு, சதீஷ் ஆகியோர் இளங்கோவனின் செல்போனை பறித்துக் கொண்டு கத்தியால் தோள் பட்டையில் குத்தி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பெரியக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Similar News
News December 6, 2025
புதுவை: BE படித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE , டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இத்தகவலை ஷேர் பண்ணுங்க…
News December 6, 2025
புதுச்சேரியில் விவசாயிகள் சங்கம் போராட்டம்

புதுச்சேரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் கீதநாதன் வெளியிட்டுள்ள செய்தியில், “மாநில அரசு உரிமைகளை பறிக்க மத்திய அரசு விதை உரிமைச் சட்டம் – 2025 கொண்டு வந்துள்ளது. மின்சார திருத்த சட்டம் -2020 விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் கொண்டு வர மாட்டோம் என கூறிய மத்திய அரசு, மின்சார திருத்த சட்டம் 2025 கொண்டு வந்துள்ளது. இந்த இரண்டு சட்டங்களை எதிர்த்து போராட்டம் விரைவில் நடைபெறும்.” என தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
புதுவையில் 6 கடைக்காரர்கள் மீது வழக்கு

புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி அருகில் உள்ள கடைகளில் கோரிமேடு போலீசார் நேற்று திடீர் சோதனை செய்தனர். அப்போது புதுவை சஞ்சீவி நகரை சேர்ந்த சந்துரு, பீச்சைவீரன்பேட்டைச் சேர்ந்த பாஸ்கர், வைத்திக்குப்பத்தைச் சேர்ந்த ரிதீஷ் மற்றும் சந்திரன், குமார், இளையராஜா ஆகியோர் கடைகளில் அரசால் தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


