News August 16, 2024

கண் கொடுத்த வணிதம் பகுதியில் மக்களுடன் முதல்வர் முகாம்

image

வடபாதிமங்கலம் அருகே கண் கொடுத்த வணிதம் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையற்றார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் கூத்தாநல்லூர் வட்டாட்சியர் ஜெகதீசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

Similar News

News November 4, 2025

திருவாரூர்: 400 மது பாட்டில்கள் பறிமுதல்

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றின் பேரளம் பகுதியில் காரைக்கால் பகுதியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்த இருவர் கைது செய்து அவர்களிடமிருந்து 400 மது பாட்டில்களும் இரண்டு இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பாராட்டினார்.

News November 3, 2025

திருவாரூர்: வாக்குச்சாவடி பயிற்சியில் ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 2026 தொடர்பாக திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில், திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனசுந்தரம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

News November 3, 2025

திருவாரூர்: 12th போதும்..ரூ.71,900 சம்பளத்தில் வேலை!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!