News April 28, 2025
கண்ணகி-முருகேசன் வழக்கு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே 22 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டில் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
Similar News
News December 12, 2025
கடலூர்: டிராக்டர் வாங்க 50% மானியம்!

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…
News December 12, 2025
கடலூர்: கல்வி உதவித் தொகை வேண்டுமா?

கடலூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட , மிகப்பிற்படுத்தப்பட்ட , சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ-மாணவியருக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்கப்படும். இதற்கு 31.12.2025-குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
News December 12, 2025
கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

பண்ருட்டி அருகே தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வரும் 6 வயது சிறுமிக்கு, அந்தப் பள்ளியில் இந்தி ஆசிரியராக உள்ள சங்கர் (67) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை சிறுமி வீட்டில் பெற்றோரிடம் கூறிதை தொடர்ந்து, பண்ருட்டி மகளிர் போலீசாரிடம், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் சங்கர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


