News April 28, 2025
கண்ணகி-முருகேசன் வழக்கு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே 22 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டில் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
Similar News
News December 18, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 4.11.2025 முதல் 14.12.2025 வரை நடைபெற்றது. இதற்கான பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற டிச.19-ம் தேதி காலை 10 மணி அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
கடலூர் அருகே நாயால் பறிபோன உயிர்

கடலூர், பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்த வத்சலா (55) என்பவர் மகன் மதுபாலனுடன் முதுநகரிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது செம்மங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது குறுக்கே நாய் வந்ததால் மதுபாலன் பிரேக் பிடித்ததால் தவறி கீழே விழுந்ததில் வத்சலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து முதுநகர் போலீசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
News December 18, 2025
கடலூர்: ரயில் மோதி தொழிலாளி பரிதாப பலி

திருச்சி மாவட்டம் லால்குடி நன்னிமங்கலத்தை சேர்ந்தவர் தொழிலாளி சங்கர் (47). இவர் நேற்று லால்குடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது கடலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பயணிகள் ரயில் மோதியதில் சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


