News February 16, 2025
கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மூலச்சத்திரத்தில் இருசக்கர வாகனத்தில் திருச்சி நோக்கி பிரபாகர் மற்றும் நண்பர் ராஜ்குமார் ஆகிய இருவர் ஓட்டிச் சென்றனர். அப்போது அவர்களது பைக் நிலை தடுமாறி முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் லாரியின் பின்பக்க சக்கரத்தில் பிரபாகர் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுதியுள்ளது.
Similar News
News December 21, 2025
திண்டுக்கல்: அய்யம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி பட்டிவீரன்பட்டி, விளங்கு அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, பெரும்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வியோகம் இருக்காது என வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்தார்,
News December 21, 2025
திண்டுக்கல் மக்களே.. உடனே இத SAVE பண்ணுங்க!

1).திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் 0451-2460084. 2).காவல்துறை கண்காணிப்பாளர் 0451-2461500. 3).திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் 0451 – 2432578. 4).மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் 0451-2460050. 5).மாவட்ட வருவாய் அலுவர்-0451-2460300 6).மாவட்ட மாசு கட்டுப்பாடு பொறியாளர் 0451-2461868. 7).மாவட்ட தீயணைப்பு அலுவலர் 0451-2904081..மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
News December 21, 2025
JUSTIN: திண்டுக்கல்லில் விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

திண்டுக்கல், சீலப்பாடி பைபாஸ் பகுதியில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது, லாரி மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிரிழந்தவர் அப்பகுதி ஹோட்டலில் பணியாற்றியவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


