News April 10, 2025
கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவித் தொகை – ஆட்சியர்

தொழிலாளர் நல உதவி கமிஷனர் அலுவலகம் மூலம் கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரம் காக்கும் வகையில் அவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், ஆஸ்துமா, பக்கவாதம் போன்ற சிகிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகளுக்கு உதவி தொகை ரூ.12,000 வீதம் இரு தவணையாக ரூ.25,000 (ஆண்டுக்கு மட்டும்) வழங்கப்படும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 14, 2025
சிவகங்கை அருகே கொடூரம் 18 வயது இளைஞர் பரிதாப பலி

சிவகங்கை அதப்படக்கி பகுதியை சேர்ந்த மணிகண்டன், சமயபிரபு உள்ளிட்ட இரு மாணவர்கள் கோவை செல்ல டூ–வீலரில் சிவகங்கை பேருந்து நிலையத்திற்கு புறப்பட்டனர். பையூர் அருகே தொண்டி ரோடு நான்கு ரோடு சந்திப்பில் திரும்பியபோது மதுரையிலிருந்து வந்த சரக்கு வாகனம் மோதி இருவரும் காயமடைந்தனர். சிவகங்கை அரசு மருத்துவமனையில் சமயபிரபு உயிரிழந்தார். லாரி டிரைவர் நிக்சன் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
News November 13, 2025
காரைக்குடி: வாக்காளர் படிவங்களை பெற தொடர்பு எண்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த படிவங்கள் (SIR) வீடு தோறும் கடந்த 5 நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது. சில வீடுகளில் வாக்காளர்கள் 3 தடவை சென்றும் வீட்டில் இல்லாத காரணத்தால் அவரவர்கள் வாக்காளர் பட்டியலை 18002339985 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என காரைக்குடி மாநகராட்சி அறிவித்துள்ளது.
News November 13, 2025
சிவகங்கை மாவட்ட இளைஞருக்கு துபாயில் பரிசு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்த சாந்தகுமார் என்ற இளைஞர் உலகளவில் புகைப்படத் துறையில் பல சாதனைகள் புரிந்துநேற்று 12/11/25 புதன்கிழமை துபாயில் நடந்த புகைப்பட போட்டியில் உலக அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். அவருக்கு ரூபாய் 17லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இது அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.


