News March 31, 2024
கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த தேர்தல் அதிகாரிகள்

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு செயல்பாட்டினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் அசோக் குமார் கார்க் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர் மனோஜ் குமார் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
Similar News
News April 19, 2025
குழந்தை இல்லாத சோகம்; பெண் தற்கொலை

கள்ளக்குறிச்சி, ஏ.குமாரமங்கலத்தை சேர்ந்தவர் மணிமொழி. இவருக்கு திருமணம் ஆகி 11 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் மனவருத்தத்தில் இருந்து வந்த அவர் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல
News April 18, 2025
தீராத நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில்

ஒவ்வொரு மனித உடலும் ஆலயம் போன்றது என்பது சித்தர்களின் வாக்கு. பணம், பதவி எது இருந்தாலும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையே சிறந்த செல்வம். தீராத நோய்களை தீர்க்கும் தளமாக வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து இறைவனின் கட்டளைக்குப் பணிந்து பக்தர்களின் நோய்களையும் தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம். தீராத நோயால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 18, 2025
இலவச கல்வி: எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மாணவர்களுக்கு எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படும். தேவையான ஆவணங்கள்: வருமானச் சான்றிதழ், இருப்பிடம் சான்றிதழ், சாதிச் சான்றிதழ். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. rte.tnschools.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.