News April 10, 2025

கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என தொழிலாளர் நல ஆணையாளர் கோ. ஜெயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்திலுள்ள அனைத்து உணவகங்கள், மளிகை கடைகள் வணிகம் நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும், மேலும் இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் வணிக நிறுவனங்களும் ஒத்துழைப்பு மற்றும் உறுதி தர வேண்டும் எனவும் கூறினார்.

Similar News

News November 20, 2025

ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, பவானிசாகர், கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம் புதூர், ராமபைலூர், புதுபீர்க்கடவு, பண்ணாரி, ராஜன் நகர், திம்பம், ஆசனூர், கோட்டமாளம், பகுத்தம்பாளையம், புங்கம்பள்ளி, தேசிபாளையம், சுங்கக்காரன்பாளையம், விண்ணப்பள்ளி, சாணார்பதி, தொட்டிபாளையம், குரும்பபாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News November 20, 2025

ஈரோடு வருகை தந்த உலககோப்பை!

image

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் முதன்முறையாக தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான வெற்றி கோப்பை தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் புஞ்சை புளியம்பட்டிக்கு வருகை தந்த உலக கோப்பைக்கு துணை ஆட்சியர் சிவானந்தம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோப்பை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

News November 20, 2025

ஈரோடு: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே https://uidai.gov.in/ என்ற இணையதளத்தில் மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!