News April 10, 2025

கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என தொழிலாளர் நல ஆணையாளர் கோ. ஜெயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்திலுள்ள அனைத்து உணவகங்கள், மளிகை கடைகள் வணிகம் நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும், மேலும் இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் வணிக நிறுவனங்களும் ஒத்துழைப்பு மற்றும் உறுதி தர வேண்டும் எனவும் கூறினார்.

Similar News

News November 16, 2025

ஈரோடு: GPay / PhonePe / Paytm பயணிகள் கவனித்திற்கு!

image

ஈரோடு மக்களே, தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News November 16, 2025

ஈரோடு அருகே வாய்க்காலில் மூழ்கி ஒருவர் பலி!

image

சேலம் மாவட்டம், சித்தூர் மக்கள் காட்டைச் சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 36. அரச்சலூர் அருகே நாச்சிவலசில் மூர்த்தி என்பவரிடம், ஜேசிபி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். அரச்சலூர் அருகே சில்லாங்காட்டு வலசில், எல்பிபி வாய்க்காலில் வெங்கடேசன் நேற்று முன்தினம் மாலை குளித்தார். அப்பொழுது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். சென்னிமலை அருகே சேமலபாளையத்தில் மிதந்த உடலை, தீயணைப்புத் துறையினர் நேற்று மாலை மீட்டனர்.

News November 16, 2025

ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பேரோடு, கங்காபுரம், கொங்கம்பாளையம், மொக்கையம்பாளையம், சடையம்பாளையம், கவுண்டம்பாளையம், சூரிப்பாறை, ஆலுச்சாம்பாளையம், தளவாய்பேட்டை, ஒரிச்சேரி, வைரமங்கலம், ஜம்பை, சலங்கபாளையம், பெரிய, சின்ன மோளபாளையம், திப்பிசெட்டிபாளையம், பருவாச்சி, துருசாம்பாளையம், புன்னம், எலவமலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

error: Content is protected !!