News April 10, 2025
கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என தொழிலாளர் நல ஆணையாளர் கோ. ஜெயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்திலுள்ள அனைத்து உணவகங்கள், மளிகை கடைகள் வணிகம் நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும், மேலும் இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் வணிக நிறுவனங்களும் ஒத்துழைப்பு மற்றும் உறுதி தர வேண்டும் எனவும் கூறினார்.
Similar News
News October 26, 2025
ஈரோடு: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

ஈரோட்டில் உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க இங்கு <
News October 26, 2025
ஈரோடு: உங்களுக்கு குழந்தை இருக்கா?

குழந்தைகளுக்கு வைட்டமின் குறைபாடு நோய் வராமல் தடுப்பதற்காக ஆண்டுக்கு 2 முறை வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்படுகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நாளை 27-ம் தேதி முதல் நவ.1-ம் தேதி வரை 2,080 அங்கன்வாடி மையங்களிலும், 376 துணை சுகாதார நிலையங்களிலும் இம்முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். (குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க)
News October 26, 2025
ஈரோடு: மாவட்ட காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை

ஈரோடு மாவட்ட காவல்துறை, ஆன்லைன் கணக்குகளில் பழக்கமில்லாத உள்நுழைவுகள், புதிய கணக்கு பதிவுகள், கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்கள் போன்ற விசித்திர செயல்பாடுகள், பழக்கமில்லாத அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் மற்றும் வழக்கத்தை விட அதிகமான பாப் அப்ஸ் ஆகியவற்றை கவனித்தால், இது ஆட்வேர் தொற்று அறிகுறியாக இருக்கலாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.


