News August 17, 2024

கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர்

image

விழுப்புரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், இன்று விண்ணப்பம் செய்ய முகாம் நடத்தப்படுவதாக நேற்று சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவியது. இதனால், பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இது முற்றிலும் தவறான செயல். இத்தகைய தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News January 3, 2026

விழுப்புரம்: மனைவி கண்முன்னே கணவர் பலி!

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் தனது மனைவி, மகனுடன் விழுப்புரத்தில் இருந்து திருக்கோயிலூர் மார்க்கமாக சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது, மூகையூர் அருகே எதிரே வந்த லாரி மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில், முருகன் தனது மகன், மனைவி கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அரகண்டநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 3, 2026

விழுப்புரம்: பெண்களிடம் குடிமகன் தகராறு!

image

செஞ்சி அருகே நேற்று ஒரு வீட்டு வாசலில், லோகேஷ் (23) போதையில் படுத்திருந்தார். அவரை அங்கிருந்து போகும் படி, அந்த வீட்டின் பெண்கள் கூறிய நிலையில், ஆத்திரமடைந்த அவர் கம்பியால் தன்னை குத்தி காயப்படுத்திக்கொண்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கிராம பெண்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள மதுபான கடையை முற்றுகையிட்டனர். பின்னர் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதும் கலைந்து சென்றனர்.

News January 3, 2026

விழுப்புரம்: பள்ளிவேன் மோதி 2 வயது குழந்தை பலி!

image

விழுப்புரம்: நெமிலியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது 2 வயது மகன் ருத்தீஷ்குமார், நேற்று வீட்டின் எதிரே விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது, அங்கு வந்த பள்ளி வேன் மாணவர்களை இறக்கி விட்டுவிட்டு, திரும்பியுள்ளது. அப்போது வேன் குழந்தை மீது மோதியதில், குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்த புகாரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!