News April 10, 2025
கடித்து குதறிய தெரு நாய்கள்: 20 பேர் காயம்

எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெரு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாய் கடியால் காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Similar News
News December 7, 2025
சேலம்: திருமண வாழ்வில் சோகம்!

சேலம் பச்சப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகையன். இவருடைய மனைவி காந்திமதி (28), நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார், காந்திமதியின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.அதில் திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆன நிலையில் கணவன் – மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகச் காந்திமதி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
News December 7, 2025
சேலம் வருகிறார் விஜய்? தவெக மாஸ்டர் பிளான்!

வரும் டிசம்பர் 9ஆம் தேதி புதுச்சேரியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், அதை முடித்தவுடன் சேலத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என தகவல். விரைவில் தேதியை குறிப்பிட்டு போலீசாரிடம் அனுமதி கடிதம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சேலம் தவெகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
News December 7, 2025
சேலம்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க


