News May 17, 2024

கடலோர காவல்படை வீரர்கள் சார்பில் டென்னிஸ் போட்டி

image

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கடலோர காவல்படை சார்பில் காரைக்கால் காமராஜர் உள்விளையாட்டு அரங்கில் கடலோர காவல் படை வீரர்களுக்கு இடையே டென்னிஸ் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் இந்திய கடலோர காவல் படை அமயா ரோந்து கப்பல் சேர்ந்த ஐந்து அணிகளாக பிரிந்து 50க்கும் மேற்பட்ட வீரர்கள் டென்னிஸ் போட்டியில் ஈடுபட்டனர். இந்த போட்டியில் உஜயா பிரதீக் கப்பல் அணியினர் முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.

Similar News

News December 6, 2025

புதுவை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

புதுச்சேரியில் மருத்துவ தேவைகளுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
1.புதுச்சேரி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை – 0413-2274552
2.காரைக்கால் பொது மருத்துவமனை – 04368-222450
3.மருத்துவ அலுவலர் 04368-222593
4.பொது மருத்துவமனை – மகப்பேறு-04368-223917
அவசர உதவிக்கு மட்டும் அழைத்து பயன் பெறலாம். இதனை SHARE பண்ணுங்க…

News December 6, 2025

புதுவை: கழிவறையில் மயங்கி விழுந்த பெண் பலி

image

திரு-பட்டினம், போலகம் மரைக்காயர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மனைவி சந்தனமேரி. இவர் தனியார் நிறுவன காவலாளியாக வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டின் பின்புறமுள்ள கழிவறைக்கு சென்ற போது சந்தனமேரி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து திரு-பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 6, 2025

புதுவை: வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த தாய்&மகன்

image

வாழைக்குளம் அருகே உள்ள அக்காசாமி மடம் வீதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சுரேஷ்(46). இவர் முத்தியால்பேட்டையைச் சேர்ந்த விஷாலி என்பவருக்கு ஒரு வழக்கிலிருந்து வரவேண்டிய தொகையை வாங்கி கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் என்பவரும் அவரது தாய் விஜயா என்பவரும் வழக்கறிஞர் சுரேஷிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் தாய் மற்றும் மகனை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!