News May 17, 2024
கடலோர காவல்படை வீரர்கள் சார்பில் டென்னிஸ் போட்டி

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கடலோர காவல்படை சார்பில் காரைக்கால் காமராஜர் உள்விளையாட்டு அரங்கில் கடலோர காவல் படை வீரர்களுக்கு இடையே டென்னிஸ் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் இந்திய கடலோர காவல் படை அமயா ரோந்து கப்பல் சேர்ந்த ஐந்து அணிகளாக பிரிந்து 50க்கும் மேற்பட்ட வீரர்கள் டென்னிஸ் போட்டியில் ஈடுபட்டனர். இந்த போட்டியில் உஜயா பிரதீக் கப்பல் அணியினர் முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.
Similar News
News November 9, 2025
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி அழைப்பு

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்தியில், தெரு நாய்களுக்கு உணவளிக்க, பிரத்தியேகமான இடங்களை அடையாளம் காணும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தெரு நாய்களுக்கு உணவளிக்க ஏதுவான இடங்கள் இருப்பின், அவற்றின் விவரங்களை உழவர்கரை நகராட்சியின் 75981 71674 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில், இரண்டு நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News November 9, 2025
புதுச்சேரி: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: {<
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 9, 2025
புதுச்சேரி: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை

நிரவி விழிதியூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (21), இவர் திருநள்ளாறை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விரக்தியடைந்த மணிகண்டன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக, காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நிரவி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


