News May 17, 2024
கடலோர காவல்படை வீரர்கள் சார்பில் டென்னிஸ் போட்டி

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கடலோர காவல்படை சார்பில் காரைக்கால் காமராஜர் உள்விளையாட்டு அரங்கில் கடலோர காவல் படை வீரர்களுக்கு இடையே டென்னிஸ் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் இந்திய கடலோர காவல் படை அமயா ரோந்து கப்பல் சேர்ந்த ஐந்து அணிகளாக பிரிந்து 50க்கும் மேற்பட்ட வீரர்கள் டென்னிஸ் போட்டியில் ஈடுபட்டனர். இந்த போட்டியில் உஜயா பிரதீக் கப்பல் அணியினர் முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.
Similar News
News December 17, 2025
புதுவை: மது போதையில் கூலித்தொழிலாளி பலி

முத்திரையர்பாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மணிபாலன் (55). இவர் நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு கல்மண்டபம் மதுபான கடை அருகே மயங்கி கிடந்துள்ளார். பின்னர் அவரை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிபாலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 17, 2025
புதுவை: இன்று இங்கெல்லாம் மின்தடை

காரைக்கால் மின்னழுத்த பாதையில் இன்று (டிச.17) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இன்று (டிச.17) காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை பை பாஸ் சாலை, மாஸ் நகர், டி.கே. நகர், ஆடிட்டர் சாகுல் ஹமீத் நகர், ராஜீவ்காந்தி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என காரைக்கால் மின்துறை உதவி பொறியாளர் அறிவித்துள்ளார்.
News December 17, 2025
புதுவை: இன்று இங்கெல்லாம் மின்தடை

காரைக்கால் மின்னழுத்த பாதையில் இன்று (டிச.17) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இன்று (டிச.17) காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை பை பாஸ் சாலை, மாஸ் நகர், டி.கே. நகர், ஆடிட்டர் சாகுல் ஹமீத் நகர், ராஜீவ்காந்தி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என காரைக்கால் மின்துறை உதவி பொறியாளர் அறிவித்துள்ளார்.


