News August 14, 2024

கடலூர்: 350 காவலர்கள் பணியிட மாற்றம்

image

கடலூர் மாவட்ட எஸ்.பி. இராஜாராம், மாவட்டத்திற்குள் ஒரே காவல் நிலையத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் உள்பட 350 பேரை பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அவர்களை உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய காவல் நிலையங்களுக்கு பணிக்கு செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News November 15, 2025

கடலூர்: வாலிபர் மீது போக்சோ வழக்கு

image

நத்தமேடு, செட்டிகுளத்தை சேர்தவர் சீதாராமன்(30). இவர் 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஜூன் மாதம் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இதனால் அந்த சிறுமி 4 மாதமாக கர்ப்பமானார் இது குறித்து ஊர் நல அலுவலர் அருளரசி சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சீத்தாராமன் மீது நேற்று போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 15, 2025

கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

கடலூர் மக்களே.. வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு க்ளிக் செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News November 15, 2025

கடலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

கடலூர், சமட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவர் கடந்த 2022 வீட்டில் தனியாக இருந்த மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததால், அப்பெண் கற்பமடைந்தார். பெண்ணின் தாய் நெய்வேலி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், வழக்கு பதிவு செய்து கடலூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இதில், நேற்று மணிகண்டனுக்கு 10ஆண்டு சிறை தண்டனை அளித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பு வழங்கினார்.

error: Content is protected !!