News February 16, 2025

கடலூர்: 30 நாட்களுக்குள் வரி செலுத்தினால் ரூ.5000 ஊக்கத்தொகை

image

கடலூர் மாநகராட்சிக்கு ரூ.28.95 கோடி வரி பாக்கி உள்ளது. மேலும் 30 நாட்களுக்குள் வரி செலுத்தினால் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அனு தெரிவித்துள்ளார். சொத்து உரிமையாளா்கள் தங்களது 2023-24 ஆம் ஆண்டுக்கான முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் முதல் 30 நாட்களுக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Similar News

News November 19, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(நவ.18) இரவு 10 மணி முதல் இன்று(நவ.19) காலை 6 மணி வரை கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாதோப்பு, ஆகிய உட்கோட்டங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 18, 2025

புனித பயணம் மேற்கொண்டவர்களுக்கு மானியம்

image

ஜெருசேலம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்துவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 பேருக்கு நேரடியாக மானியம் வழங்குவதற்கு புர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 28.2.2025-க்குள் <>https://www.bcmbcmw.tn.gov.in <<>>இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 18, 2025

கடலூர் மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம்!

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது‌. இந்த நிலையில் இன்று (நவ.18) காலை 8.30 மணி நிலவரப்படி அண்ணாமலை நகர் 60 மில்லி மீட்டர், சிதம்பரம் 47.8 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 43.1 மில்லி மீட்டர், கடலூர் 36.9 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் 35 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 32.3 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 559 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!