News April 9, 2025

கடலூர்: 14 எஸ்.ஐ.க்கள் இடம் மாற்றம் – எஸ்.பி. அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படை எஸ்.ஐ. சிவக்குமார், கடலூர் போக்குவரத்து காவல் நிலையத்திற்கும், ஆயுதப்படை தில்லை கோவிந்தராஜ பெருமாள் சிதம்பரத்திற்கும், ஆயுதப்படை எஸ்.ஐ.க்கள் செல்வநாயகம், ராமஜெயம், ஆனந்தன் ஆகியோர் விருத்தாசலம் போக்குவரத்து காவல் நிலையத்திற்கும் என மாவட்டம் முழுவதும் 14 எஸ்.ஐ.க்களை பணி இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News October 19, 2025

கடலூர்: கரண்ட் கட்டா? ஒரு Phone போதும்!

image

கடலூர் மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 19, 2025

கடலூர்: அனுமதி இன்றி பட்டாசு விற்றவர் கைது

image

நடுவீரப்பட்டு பகுதியில் அரசின் அனுமதி இன்றி கடைகளில் பட்டாசு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் இன்று (அக்.19) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுமார் ரூ.10,000 மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, விற்பனையில் ஈடுபட்ட பிரபாகரன் (54) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

News October 19, 2025

கடலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்!

image

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கும் நேரங்களில் மக்கள் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்காமல் தவிர்ப்பது நல்லது.

error: Content is protected !!