News May 7, 2025

கடலூர்: 10th பாஸ் போதும்.. அரசு வேலை ரெடி

image

மத்திய அரசின் ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் காலியாக உள்ள Seaman, Greaser, Tradesman போன்ற 14 குரூப்-சி காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.18000 முதல் ரூ.56900 வரை வழங்கப்படும். 10 th, ஐ.டி.ஐ முடித்த 18 – 25 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு www.cbic.gov.in என்ற இணையத்தை பார்க்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE செய்யவும்!

Similar News

News December 5, 2025

கடலூர்: 12 வயது சிறுமி கர்ப்பம்; இளைஞர் கைது

image

சேத்தியாத்தோப்பு அருகே 12 வயது சிறுமி செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே சூளையில் வேலை பார்த்து வந்த மணிகண்டன் (26) என்பவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதில் அவர் கருவுற்றார். இதையடுத்து மருத்துவனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அளித்த புகாரின் பேரில் சேத்தியாதோப்பு போலீசார் மணிகண்டனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

News December 5, 2025

கடலூர்: தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி

image

மஞ்சக்குப்பத்தை சேர்ந்த கந்தவேல் மகள் சுருதி (19). வேலூரில் தனியார் கல்லூரியில் படித்து வந்த இவர் நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் தனது தாய் தீபாவுடன் சுருதி உறங்கியுள்ளார். இதையடுத்து அதிகாலை அவரது தாய் எழுந்து பார்த்தபோது சுருதி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைக்கண்டு கதறிய அவரது தாய் அளித்த புகாரின் பேரில், புதுநகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News December 5, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (டிச.4) இரவு 10 மணி முதல் இன்று(டிச.5) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!