News April 11, 2025
கடலூர்: 10 வட்டாட்சியர் அலுவலகங்களில் நாளை சிறப்பு முகாம்- ஆட்சியர்

கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, வேப்பூர், புவனகிரி ஆகிய 10 இடங்களில் வட்டாட்சியர் அலுவலகங்கள் செயல்படுகிறது. இந்த அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நாளை (12/4/2025) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News October 28, 2025
கடலூர்: நாளை சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்

கடலூர் மாவட்டத்தில் நாளை (அக்.29) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விருத்தாசலம் வட்டம், ராஜேந்திரப்பட்டினம் மேல்நிலைப்பள்ளி கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட எம்என்எஸ் மகால், கடலூர் அடுத்த காரணப்பட்டு கிராம ஊராட்சி கட்டிட வளாகம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 28, 2025
கடலூர்: ரூ.30,000 சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.30,000
4. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
5. கடைசி தேதி : 29.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News October 28, 2025
கடலூர்: இளைஞருக்கு நேர்ந்த சோகம்

சிதம்பரம் அடுத்த கிள்ளை, எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (24). தொழிலாளியான இவர் தீபாவளி அன்று பட்டாசுகளை வெடித்தபோது, பறந்து வந்த ஒரு வெடி சந்தோஷின் சட்டைப்பையில் விழுந்து வெடித்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிள்ளை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


