News April 27, 2025
கடலூர்: விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு !

இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 309 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Trafiic Controller) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பி.ஈ /பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகள் www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைதேடும் உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்..
Similar News
News October 24, 2025
கடலூர்: விதை பரிசோதனை நிலையத்தில் ஆய்வு

கடலூர் விதை பரிசோதனை நிலையத்தில், இன்று(ஆக்.24) காஞ்சிபுரம் விதை பரிசோதனை அலுவலர் ராஜகிரி அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். மேலும் விதை முளைப்பு திறன் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இதில், 2008 விதை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் 95 விதை மாதிரிகள் தர மற்றவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது வேளாண் அலுவலர் விஜயா, தில்லைக்ரசி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News October 24, 2025
சிறுமையை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு

கடலூர், ஸ்ரீமுஷ்னத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, 12ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வாலிபரும் சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் தனிமையில் இருந்தாக கூறப்ப்டுகிறது. இந்நிலையில், சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 24, 2025
கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் கண்டறில்; இடைத்தரகர் கைது

பொய்யனப்பாடி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வீட்டில் கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என ஸ்கேன் செய்து பாலினம் கூறுவதாக மருத்துவ குழுவிற்கு கிடைத்த தகவலின் பெயரில், இணை இயக்குனர் மணிமேகலை தலைமையில் சோதனை செய்தனர். அப்போது ஸ்கேனிங் மிஷினை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், உண்மை என கண்டறியப்பட்டதால் சிறுபாக்கம் போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிந்து இடைத்தரகர் ராஜாவை இன்று கைது செய்தனர்.


