News August 9, 2024
கடலூர் விஜிலென்ஸ் ஆணையருக்கு பதவி உயர்வு

தமிழ்நாட்டில் தஞ்சை, கள்ளக்குறிச்சி,பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் 24 காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி-ஆக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த முத்தமிழ் சென்னை முதன்மை கண்காணிப்பு அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
Similar News
News December 3, 2025
கடலூர்: 5 டன் ரேஷன் அரிசி கடத்தியர் கைது

குடிமைப் பொருள் போலீசார் ராமநத்தம் அருகே சுடுகாட்டு பகுதியில் நேற்று இரவு சோதனை மேற்கொண்டனர். அப்போது இரண்டு சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது எலமங்கலத்தைச் சேர்ந்த தேனரசு (21) என்பவரை கைது செய்து, இரண்டு சரக்கு வாகனம் மற்றும் ஐந்தாயிரம் கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர். ம்ர்ர்லும் தப்பி ஓடிய ராஜேஷ், பிரபாகரன், மணிகண்டன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
News December 3, 2025
BREAKING: கடலூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

கடலூரில் ‘டிட்வா’ புயல் காரணமாக சில நாட்களாக கனமழை பெய்தது. இதனாக் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று(டிச.3) கடலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News December 3, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.2) இரவு 10 மணி முதல் இன்று (டிச.3) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


