News August 9, 2024
கடலூர் விஜிலென்ஸ் ஆணையருக்கு பதவி உயர்வு

தமிழ்நாட்டில் தஞ்சை, கள்ளக்குறிச்சி,பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் 24 காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி-ஆக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த முத்தமிழ் சென்னை முதன்மை கண்காணிப்பு அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
Similar News
News September 15, 2025
கடலூர்: 8-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்

பண்ருட்டி அருகே உள்ள கணிசபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாலா என்ற சதீஷ்ராஜ் (19). கூலித் தொழிலாளியான இவர், பண்ருட்டி அருகே 8-ம் வகுப்பு பயின்று வரும் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் பாலாவை கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News September 15, 2025
விருதாச்சலம்: புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு

விருதாச்சலம் அடுத்த முகாசபரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று (செப்.14.) நடைபெற்றது. இதற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கௌதமி முன்னிலை வகித்தார். நிகழ்வில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி குத்து விளக்குகேற்றி வகுப்பறைகளை மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
News September 14, 2025
கடலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்துப் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (செப்.,14) கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் இரவு ரோந்துப் பணிக்குச் செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.