News March 19, 2024
கடலூர்: வாகனங்களில் கட்சி கொடியை அகற்ற அறிவுறுத்தல்

நாடாளுமன்ற தேர்தலை (2024) முன்னிட்டு கடலூர் முழுவதும் காவல்துறை சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் இன்று மாலை மஞ்சக்குப்பம் பகுதியில் டி.எஸ்.பி பிரபு தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்பொழுது கட்சி கொடியுடன் வந்த வாகனங்களை நிறுத்தி கொடிகளை அகற்றுமாறு வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளருக்கு அறிவுறுத்தினர்.
Similar News
News November 14, 2025
கடலூர்: நாளை மின்தடை ரத்து

கடலூர் மாவட்டத்தில் 65 தேர்வு மையங்களில் நாளை டெட் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 908 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் நாளை(நவ.15) பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெட் தேர்வு காரணமாக மின்தடை மாவட்டம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
News November 14, 2025
கடலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க
News November 14, 2025
கடலூர்: மனைவி நோயால் பாதிப்பு-கணவன் தற்கொலை

கரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முத்தமிழ்செல்வன் (34) கம்ப்யூட்டர் சென்டரில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பத்மினிக்கு தைராய்டு நோய் உள்ளதாக தெரிகிறது. இதனால் முத்தமிழ்செல்வன் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று திடீரென்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து பத்மினி கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


