News August 17, 2024
கடலூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு இரண்டு முறை சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. மும்பையில் இருந்து ஆக.27, செப்.6 தேதிகளிலும், வேளாங்கண்ணியில் இருந்து ஆக.29, செப்.8 தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு துவங்கி உள்ளது. இந்த ரயில் புனே, சோலாபூர், ராய்ச்சூர், ரேணிகுண்டா, திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் வழியாக செல்லும்.
Similar News
News December 21, 2025
கடலூர்: டூவீலர் விபத்தில் வாலிபர் பலி

வெண்கரும்பூரை சேர்ந்தவர் மணிகண்டன் (37). இவர் பைக்கில் தனது மகன் விஷ்வாவுடன் கருவேப்பிலங்குறிச்சி சென்றபோது, எதிரே வந்த பெண்ணாடத்தை சேர்ந்த ஜெகன் (25) என்பவர் ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் ஜெகன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மணிகண்டன், விஷ்வா ஆகியோர் படுகாயமடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 21, 2025
கடலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மற்றும் புகைப்படம் மாற்றம் ஆகியவற்றிற்காக வரும் டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News December 21, 2025
கடலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மற்றும் புகைப்படம் மாற்றம் ஆகியவற்றிற்காக வரும் டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


