News April 14, 2025
கடலூர்: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.
Similar News
News December 23, 2025
கடலூர்: கார்கள் மோதி விபத்து-இருவர் பலி!

ரெட்டிச்சாவடி அடுத்த கிளிஞ்சிகுப்பத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (63). இவர் உறவினர் 6 பேருடன் நேற்று உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு காரில் மேல்அழிஞ்சிப்பட்டு பகுதியில் சென்றபோது அவ்வழியாக வந்த காரும், இவர்கள் சென்ற காரும் நேருக்கு நேர் மோதின. இதில் புஷ்பராஜ் மற்றும் மஞ்சுளா(42) என்பவரும் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 22, 2025
கடலூர்: அதிசய கிணறு கொண்ட பெருமாள் கோயில்!

கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் தேவநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆதிசேஷன் கிணறு உள்ளது. பெருமாளுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டபோது, ஆதிசேஷன் தன் வாலால் பூமியைப் பிளந்து, நீரூற்றை ஏற்படுத்தி பெருமாள் தாகத்தை தணித்தார் என சொல்லப்படுகிறது. இந்த கிணறு இன்றும் கோயிலில் உள்ளது. இது ஒரு பிரார்த்தனை கிணறாகவும் கருதப்படுகிறது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 22, 2025
கடலூர்: SBI வங்கியில் வேலை; கடைசி வாய்ப்பு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: வருடம் ரூ.6.20 லட்சம்
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 23.12.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


