News May 7, 2025

கடலூர்: ரூ.49,000 சம்பளத்தில் பேங்க் வேலை

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான யூனியன் வங்கியில் உதவி மேனேஜர் பதவிக்கான 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் பட்டப்படிப்புடன் கூடிய CA/CS/CMA முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். 22 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் www.unionbankofindia.co.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பேங்க் வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்!

Similar News

News December 3, 2025

கடலூர்: பெரியார் விருது – ஆட்சியர் அறிவிப்பு!

image

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மாவட்டசிறுபான்மையினர் அலுவலகத்தில் 18.12.2025க்குள் விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவிந்துள்ளார்.

News December 3, 2025

கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு

image

புவனகிரியை அடுத்த சாத்தப்பாடி கிராமத்து சேர்ந்தவர் வேலு(23), இவர் 17 வயதுடைய சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அச்சிறுமி கர்ப்பமானாதல் துகுறித்து மேல் புவனகிரி ஊராட்சி ஊர் நல அலுவலர் அருளரசி கொடுத்த புகாரின் பேரில், சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் வாலிபர் மீது நேற்று போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 3, 2025

குறிஞ்சிப்பாடி: தீயில் கருகி பெண் உயிரிழப்பு

image

குறிஞ்சிப்பாடி அடுத்த சமட்டிக் குப்பத்தை சேர்ந்தவர் காசிராஜன் மனைவி வன்னிய மலர்(37). இவர் தனது வீட்டில் விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த போது, நைட்டியில் தீப்பட்டு உடல் முழுவதும் பற்றி எரிந்தது. இதில் படுகாயம் அடைந்த வன்னியமலர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!