News August 10, 2024

கடலூர் முதுநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை

image

கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் 2024–25ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை வருகிற 13ஆம் தேதி நடக்கிறது. இதில் மாணவர்களின் மதிப்பெண்கள் சரிபார்க்கப்படும். இதற்காக இளங்கலை பட்டப்படிப்பு மதிப்பெண்களை மாணவர்கள் தாங்கள் விண்ணப்பித்த துறைகளில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் 14ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.

Similar News

News November 16, 2025

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; எச்சரிக்கை

image

வங்க கடலில் நேற்று குறைந்த காற்றழுத்து தாழ்வு மண்டலம் உருவானது.
இதனால், கடலில் 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கடலூர் மீன்வளத் துறை உதவி இயக்குனர் நித்தியா பிரிய தர்ஷினி அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News November 16, 2025

கடலூர்: மீண்டும் கனமழை எச்சரிக்கை!

image

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கடலூர் மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளையும் (நவ.17) இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 16, 2025

கடலூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்,<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!