News March 27, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (27/03/2024) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகர், நெய்வேலி காவல் ஆய்வாளர் சந்திரன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் சுபிக்ஷா ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 31, 2025

கடலூர்: அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி

image

நெய்வேலி 17-வது வட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன் (36). இவர் என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரிடம் ரூ.20 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கடலூர் எஸ்.பி. ஜெயக்குமாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில், கடலூர் குற்றப்பிரிவு போலீசார் நேற்று வழக்கு பதிந்து ரூ.20 லட்சம் மோசடி செய்த மணிகண்டனை கைது செய்தனர்.

News October 31, 2025

கடலூர்: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News October 31, 2025

கடலூர் அருகே மின்சாரம் தாக்கி பரிதாப பலி

image

கம்மாபுரம் அடுத்த கத்தாழை கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி (70). இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது நிலத்தில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று பகல் 2 மணியளவில் வயலுக்கு சென்ற முதியவர் அருகில் உள்ள நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!