News August 15, 2024
கடலூர் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றினார்

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 78-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜராம் , கூடுதல் ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
Similar News
News October 23, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.22) இரவு 10 மணி முதல் இன்று (அக்.23) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
News October 22, 2025
கடலூர்: எஸ்பி தலைமையில் பெட்டிஷன் மேளா

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் இன்று(அக்.22) கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில், பெட்டிஷன் மேளா நடைபெற்றது. இதில், காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட காவர்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தவிட்டார்.
News October 22, 2025
கடலூர்: இந்திய அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், IPPB வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க