News August 15, 2024
கடலூர் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றினார்

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 78-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜராம் , கூடுதல் ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
Similar News
News December 1, 2025
கடலூர்: மயங்கி விழுந்த சிறுவன் திடீர் சாவு

விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (50). இவரது மகன் கிஷோர் (16) பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இவர்களது புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வீட்டில் இருந்த கிஷோர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 1, 2025
கடலூர்: 500 போலீசார் அனுப்பி வைப்பு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீப விழா நடைபெற உள்ளது. இதில் டிசம்பர் 3-ம் தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு பணிக்காக கடலூர் மாவட்டத்தில் இருந்து ஆயுதப்படை, போக்குவரத்து, குற்றப்பிரிவு போலீசார் என 500 பேரை திருவண்ணாமலைக்கு எஸ்.பி ஜெயக்குமார் அனுப்பி வைத்துள்ளார்.
News December 1, 2025
கடலூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


