News January 24, 2025
கடலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு

கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கூடுதலாக பணியாற்றிட பாதுகாப்பு அலுவலர் பணிக்கும், சமூகப்பணியாளர் பணிக்கு 2 காலியிடங்கள் நிரப்படவுள்ளன. ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்கள் கடலூர் மாவட்ட இணையதள முகவரி www.cuddalore.tn.nic.in-ல் கொடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE NOW!
Similar News
News November 23, 2025
கடலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098
5. முதியோருக்கான அவசர உதவி : 1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News November 23, 2025
BREAKING கடலூர்: மின்கம்பி அறுந்து விழுந்து 3 பேர் பலி

கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட சி.சாத்தமங்கலம் கிராமத்தில் இன்று (நவ.23) மதியம் பெய்த கனமழையின் காரணமாக புளியமரம் ஒன்று சாய்ந்து மின்கம்பியின் மீது விழுந்தது. இதில் மின்கம்பி அறுந்து கீழே விழுந்ததில், தங்களது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த வனதாஸ், மரிய சூசை, பிளவ்மேரி ஆகியோர் மின்சாரம் தாக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
News November 23, 2025
கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவ.,23) காலை 8:30 மணி நிலவரப்படி அண்ணாமலை நகர் 48 மில்லி மீட்டர், குறிஞ்சிப்பாடி 44 மில்லி மீட்டர், சிதம்பரம் 42 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் 39.3 மில்லி மீட்டர், வடக்குத்து 32 மில்லி மீட்டர், காட்டுமைலூர் 31 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 758.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


