News January 24, 2025

கடலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு

image

கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கூடுதலாக பணியாற்றிட பாதுகாப்பு அலுவலர் பணிக்கும், சமூகப்பணியாளர் பணிக்கு 2 காலியிடங்கள் நிரப்படவுள்ளன. ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்கள் கடலூர் மாவட்ட இணையதள முகவரி www.cuddalore.tn.nic.in-ல் கொடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE NOW!

Similar News

News October 28, 2025

கடலூர்: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் கவுரவ நிதிஉதவி பெறும் விவசாயிகளில் இதுவரை 62,095 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 17,374 பேர் தனித்துவ அடையாள அட்டை பெறாமல் உள்ளனர். நவம்பர் 2025ம் மாத தொடக்கத்தில், 21-வது தவணை பெறுவதற்கு, விவசாயிகள் விரைவாக தனித்துவ விவசாய அடையாள அட்டைப் பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 28, 2025

கடல் மூழ்கி பெண் மாயம்; போலீசார் விசாரணை

image

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் பெண் ஒருவர் தனது காலனி மற்றும் கைப்பையை கரையில் வைத்துவிட்டு, திடீரென்று கடலில் இறங்கினார். சிறிது நேரத்தில் அலையில் சிக்கிய அந்தப் பெண் மீண்டும் கரைக்கு வரவில்லை. அதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து தேவனாம்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 28, 2025

கடலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் வருகிற நவ.1ஆம் தேதி உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு, காலை 11 மணியளவில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியஎ சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஊராட்சியின் நிதி செலவீனம், தணிக்கை அறிக்கை உள்ளிட்டவற்றை விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதில், ஊராட்சி உள்ள அனைத்து பொதுமக்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!