News January 2, 2025

கடலூர் மாவட்டத்தில் ரூ.4 கோடிக்கு மது விற்பனை

image

தமிழகத்தில் பண்டிகை காலங்களில் மது விற்பனையானது உச்சம் தொடுவது தற்போது வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் புத்தாண்டை முன்னிட்டு, சுமார் 4.5 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இருப்பினும் இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.51 லட்சம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றிய உங்கள் கருத்து? கமெண்டில் தெரிவிக்கவும்! ஷேர் செய்யவும்..

Similar News

News November 24, 2025

கடலூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை

image

கடலூர் மாவட்டத்தில் கன மழை காரணமாக முதலில் நான்கு தாலுகாக்களுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்தார், இந்நிலையில் கனமழை எச்சரிக்கையை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.24) விடுமுறை அளித்து கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் மறு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News November 24, 2025

BREAKING: கடலூரில் இன்று விடுமுறை அறிவிப்பு

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் கடலூர் மாவட்டத்தில் சிதம்ரம். ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் அகிய 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று (நவ.24) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News November 24, 2025

கடலூர் மாவட்டத்தில் 332 பேர் கைது

image

கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 128 கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதுவரையில் 332 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேற்று தெரிவித்துள்ளார். இதில், 208 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், 15 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!