News August 8, 2024

கடலூர் மாவட்டத்தில் பேச்சு போட்டி

image

கடலூர் மாவட்டத்தில், அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி வருகிற 21ஆம் தேதியும், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி வருகிற 22ஆம் தேதியும், மாவட்டத்தில் உள்ள கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடைபெறவுள்ளது. மேலும், வெற்றியாளர்களுக்கு பரிசு தொகைகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

Similar News

News December 5, 2025

கடலூர் அருகே இளைஞர் மீது துப்பாக்கி சூடு

image

கிள்ளை அடுத்த பின்னத்தூரை சேர்ந்தவர் தவுசிக் (18). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரான முஸ்தபா (18) தவுசிக்கின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் தவுசிக் தந்தையின் பழைய ஏர் கன் வகை துப்பாக்கியை எடுத்து பார்த்த கொண்டிருந்த போது தவறுதலாக தவுசிக்கின் வலது காலில் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த தவுசிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கிள்ளை போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 5, 2025

கடலூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு …

image

கடலூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில்<> eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News December 5, 2025

கடலூர்: 12 வயது சிறுமி கர்ப்பம்; இளைஞர் கைது

image

சேத்தியாத்தோப்பு அருகே 12 வயது சிறுமி செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே சூளையில் வேலை பார்த்து வந்த மணிகண்டன் (26) என்பவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதில் அவர் கருவுற்றார். இதையடுத்து மருத்துவனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அளித்த புகாரின் பேரில் சேத்தியாதோப்பு போலீசார் மணிகண்டனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

error: Content is protected !!