News March 28, 2025
கடலூர் மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம்

கடலுார் மாவட்டத்தில், கிராம சபை கூட்டம், நாளை (29ஆம் தேதி) காலை 11 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடக்கிறது. கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றியும், மதசார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தாமல் பொதுவான இடங்களில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில் நடத்த வேண்டும் என்று கடலூர் ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 26, 2025
கடலூர்: புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு!

கடலூர் மாவட்டம், புவனகிரி காவல் நிலைய புதிய ஆய்வாளராக முத்து ஈஸ்வரன் என்பவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு இருந்த காவல் ஆய்வாளர் லட்சுமி முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், புதியதாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த முத்து ஈஸ்வரன் ஆய்வாளராக புவனகிரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
News November 26, 2025
கடலூர்: மயங்கி விழுந்துவர் உயிரிழப்பு

வடலூர் அடுத்த வடஹரிராஜபுரத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (70). உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர் நேற்று மாலை மருத்துவமனை செல்வதற்காக பஸ்ஸில் வந்து வடலூர் பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன் திடீரென மயங்கி விழுந்தார். உடனே குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News November 26, 2025
JUST IN கடலூர்: மிக கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் நவ.29-ம் தேதி இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!


