News April 11, 2025
கடலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.11) பல்வேறு பகுதியில் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கடலூர் மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க. இந்த தகவலை உங்க உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News September 14, 2025
கடலூர்: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ??

கடலூர் மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இங்கே <
News September 14, 2025
கடலூர்: தப்பிக்க முயன்ற இளைஞருக்கு மாவுகட்டு

நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்தவர் கணேசன் மனைவி சந்திரகலா (40). முன்விரோதம் காரணமாக இவரது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய 8 பேர் மீது நெய்வேலி போலீசார் வழக்கு பதிந்து 4 பேரை ஏற்கனவே கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய ராஜதுரையை (20) நேற்று போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர், தப்பி ஓடிய போது தவறி விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ராஜதுரைக்கு மாவுகட்டு போடப்பட்டுள்ளது.
News September 14, 2025
கடலூர்: புதிய கமிஷனர் நியமனம்

கடலூர் மாநகராட்சி ஆணையர் அனு 128 நாட்கள் ஈட்டிய விடுப்பில் செல்கிறார். இதனால் அவருக்கு பதிலாக கடலூர் மாநகராட்சியின் கமிஷனராக, நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் முஜிபுர் ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதன் ரெட்டி பிறப்பித்துள்ளார். இந்நிலையில் முஜிபுர் ரகுமான் விரைவில் கடலூர் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்க உள்ளார். SHARE NOW!