News April 26, 2025
கடலூர்: மாணவர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

சென்னை, கிண்டியில் உள்ள பயிற்சி நிறுவனத்தில் 2025-2026ஆம் ஆண்டிற்கான உயர்கல்விக்கான நேரடி சேர்க்கை முகாம் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் 5.5.2025 முதல் 7.5.2025 வரை நடக்கிறது. இதில் 10, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டபடிப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்கள் கலந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை 9677943633, 9677943733 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News July 11, 2025
கடலூர்: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

➡️ கடலூர் மாவட்டத்தில் நாளை 64,000 பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்
➡️ ‘BLACK INK BALL POINT’ பேனாவுக்கு மட்டுமே அனுமதி
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்வது கட்டாயம்
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை
➡️ இதனை தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு SHARE செய்யவும்!
News July 11, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நாளை நடைபெற உள்ள குரூப் 4 தேர்வு குறித்து கூறுகையில், “ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் மாணவர்களின் நலன் கருதி குடிநீர், கழிவறை, தடையில்லா மின்சார வசதி, காவல்துறையினரின் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை சார்பில் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல தேவையான போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
News July 11, 2025
கடலூர்: நகைக்காக கழுத்தை நெரித்து மூதாட்டி கொலை

சிதம்பரம் அருகே நத்தமேடு கிராமத்தை சேர்ந்த சந்திரா (60) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து மருதூர் போலீசார் நடத்திய விசாரணையில், அதே கிராமத்தை சேர்ந்த பசுபதி (27) என்பவர், மூதாட்டி அணிந்திருந்த 2½ பவுன் நகைக்காக வீட்டில் தனியாக வசித்து வந்த அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.