News December 4, 2024
கடலூர்: பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் நாளை ( 05.12.2024) வியாழக்கிழமை இயங்கும் என கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 2, 2025
கடலூர்: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

கடலூர் மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News December 2, 2025
கடலூர்: டிராக்டர் மீது பைக் மோதி பரிதாப பலி

குறிஞ்சிப்பாடி கே.கே.நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). பிளைவுட் கடை வைத்துள்ள இவர் தனது பைக்கில் குறிஞ்சிப்பாடி அண்ணாநகர் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். பின்னர் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
News December 2, 2025
கடலூர்: பைக் மோதி மின்வாரிய ஊழியர் பரிதாப பலி

விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரியை சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர் இளஞ்செழியன் (58). இவர் விருத்தாசலம்- சிதம்பரம் சாலையில் நடந்து சென்றபோது அப்பகுதி வழியாக வந்த பைக் இளஞ்செழியன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் தஞ்சாவூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.


