News December 4, 2024
கடலூர்: பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் நாளை ( 05.12.2024) வியாழக்கிழமை இயங்கும் என கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 4, 2025
கடலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு https://tamco.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சிறுபான்மையின அலுவலகத்தை நேரில் அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 4, 2025
கடலூர்: இடி விழுந்து கோயில் சேதம்

கடலூர் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ரெட்டிச்சாவடி அடுத்த ரங்கரெட்டிபாளையம் பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலின் மீது மின்னல் தாக்கியதில் கோவிலின் சுவர் இடிந்து கீழே விழுந்தது. மேலும் மின் சாதன பொருட்களும் சேதமடைந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News December 4, 2025
கடலூர்: அரசு பஸ் மோதி வாலிபர் துடிதுடித்து பலி

விருத்தாசலம் அடுத்த சித்தலூரை சேர்ந்தவர் குமார் மகன் நமச்சிவாயம் (22). இசைக் கலைஞரான இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள விருத்தாசலம்- ஜெயங்கொண்டம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று நமச்சிவாயம் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


