News December 4, 2024
கடலூர்: பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் நாளை ( 05.12.2024) வியாழக்கிழமை இயங்கும் என கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 16, 2025
கடலூர் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை

கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் நித்தியா பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு மீனவர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
News November 16, 2025
கடலூர்: ரூ.45,000 சம்பளத்தில் பேங்க் வேலை

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 21 – 30 வயதுக்குட்பட்ட நபர்கள்,<
News November 16, 2025
கடலூர்: நாய் கடித்ததால் மாணவி தற்கொலை

ம.புடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீமான் மகள் பிருந்தா (19). தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர் தனது வீட்டிற்கு முன் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று வீட்டில் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


