News March 28, 2024
கடலூர் தொகுதியில் 24 பேர் வேட்பு மனு தாக்கல்!

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கிறது. அதையொட்டி வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று கடலூர் தொகுதியில் போட்டியிட 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் நா.த.க மணிவாசகம், தேமுதிகவில் கூனங்குறிச்சியை சேர்ந்த பெரியநாயகராஜ் ஆகியோர் 2-வது மனு உட்பட 7 பேர் என, கடலூர் தொகுதியில் மொத்தம் 24 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
Similar News
News November 26, 2025
கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கடலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
கடலூர்: பெண்ணிடம் பலே மோசடி

புவனகிரி பகுதியில் பெண் ஒருவரின் திருமண தடை பிரச்சனையை தீர்த்து வைக்க பூஜை செய்வதாக கூறி ரூ.5.70 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஒருவர் ஏமாற்றியதாக போலீசாருக்கு புகார் சென்றது. அதைத் தொடர்ந்து எஸ்.பி-யின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து ஆந்திர மாநிலம் உய்யுறு என்ற இடத்தில் மோசடியில் ஈடுபட்ட குடிவாடா யுவகல்யான் (25) என்பவரை கைது செய்து நேற்று சிறையில் (நவ.25) அடைத்தனர்.
News November 26, 2025
கடலூர்: பெண்ணிடம் பலே மோசடி

புவனகிரி பகுதியில் பெண் ஒருவரின் திருமண தடை பிரச்சனையை தீர்த்து வைக்க பூஜை செய்வதாக கூறி ரூ.5.70 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஒருவர் ஏமாற்றியதாக போலீசாருக்கு புகார் சென்றது. அதைத் தொடர்ந்து எஸ்.பி-யின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து ஆந்திர மாநிலம் உய்யுறு என்ற இடத்தில் மோசடியில் ஈடுபட்ட குடிவாடா யுவகல்யான் (25) என்பவரை கைது செய்து நேற்று சிறையில் (நவ.25) அடைத்தனர்.


