News May 8, 2025
கடலூர்: தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கவும். சம்பளமாக மாதம் ரூ.16,600 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்!
Similar News
News November 23, 2025
கடலூர்: தப்பி ஓடிய குற்றவாளிக்கு காலில் மாவு கட்டு

கடலூர், தோப்புக்கொல்லை சேர்ந்தவர் கவி (எ) கவியரசன்(26). இவர் கஞ்சா வழக்கு மற்றும் பெண்ணை தாக்கிய வழக்குகளில் தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில் வார சந்தையின் பின்புறம் உள்ள, என்.எல். சி தைலம் தோப்பில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற நெய்வேலி போலீசார் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடியதில் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டதில், அவருக்கு சிகிச்சையளித்து சிறையில் அடைத்தனர்.
News November 23, 2025
கடலூர்: பெண் தவறி விழுந்து உயிரிழப்பு

கடலூர் முதுநகர் அடுத்த கோதண்டராமபுரத்தை சேர்ந்தவர் சாந்தி(47). இவர் தனது வீட்டின் அருகில் தவறிகீழே விழுந்ததில் வயிற்றில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 23, 2025
இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் அறிவிப்பு

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (நவ.22) இரவு 10 மணி முதல் (நவ.23) காலை 6 மணி வரை கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாதோப்பு, ஆகிய உட்கோட்டங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.


