News March 19, 2024
கடலூர்: சோதனை சாவடி கட்டிடம் திறந்து வைத்த எஸ்.பி

கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் ரூ.13 லட்சம் செலவில் புதிதாக சோதனை சாவடி கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டு புதிய சோதனை சாவடி கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 29, 2025
கடலூர்: நொடிப்பொழுதில் நேர்ந்த மரணம்

பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி கதிரவன் (32). இவர் நேற்று மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது, இரும்பு டேப் மூலம் அளவீடு செய்தார். அப்போது அந்த மாடியின் அருகில் சென்ற மின் கம்பியில், அந்த இரும்பு டேப் பட்டதில் கதிரவன் மின்சாரம் தாக்கி பலியானார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
News October 29, 2025
கடலூர்: தட்டித் தூக்கிய போலீசார்

கடலூர் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வாகன திருட்டு தொடர்பாக தணிக்கை மேற்கொண்டனர். அப்போது மேல் பூவானி குப்பத்தை சேர்ந்த வேல்முருகன் (27), என்பவரை விசாரணை செய்ததில் புதுச்சத்திரம், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, வடலூர், உள்ளிட்ட இடங்களில் திருடிய 11 இருசக்கர வாகனம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்து நேற்று கைது செய்தனர்.
News October 29, 2025
கடலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் வருகிற நவ.1-ம் தேதி உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு, காலை 11 மணியளவில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இதில் ஊராட்சியின் நிதி செலவீனம், தணிக்கை அறிக்கை உள்ளிட்டவற்றை விவாதிக்க வேண்டும் என்றும், அனைத்து பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


