News August 14, 2024

கடலூர்: சுதந்திர தின விழாவுக்கு கலெக்டர் அழைப்பு

image

கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நாளை நடக்கிறது. இதில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் காலை 9.05 மணிக்கு தேசிய கொடி ஏற்றி வைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்ததும், நலத்திட்ட உதவி வழங்குகிறார். இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்

Similar News

News December 5, 2025

கடலூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு …

image

கடலூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில்<> eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News December 5, 2025

கடலூர்: 12 வயது சிறுமி கர்ப்பம்; இளைஞர் கைது

image

சேத்தியாத்தோப்பு அருகே 12 வயது சிறுமி செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே சூளையில் வேலை பார்த்து வந்த மணிகண்டன் (26) என்பவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதில் அவர் கருவுற்றார். இதையடுத்து மருத்துவனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அளித்த புகாரின் பேரில் சேத்தியாதோப்பு போலீசார் மணிகண்டனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

News December 5, 2025

கடலூர்: தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி

image

மஞ்சக்குப்பத்தை சேர்ந்த கந்தவேல் மகள் சுருதி (19). வேலூரில் தனியார் கல்லூரியில் படித்து வந்த இவர் நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் தனது தாய் தீபாவுடன் சுருதி உறங்கியுள்ளார். இதையடுத்து அதிகாலை அவரது தாய் எழுந்து பார்த்தபோது சுருதி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைக்கண்டு கதறிய அவரது தாய் அளித்த புகாரின் பேரில், புதுநகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!