News March 19, 2024
கடலூர் சிறையில் கேமரா உடைப்பு

சென்னையை சேர்ந்தவர் ரவுடி தனசேகரன். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர் கடந்த 2 ஆண்டுகளாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் சிறையில் திரைப்படம் திரையிடப்பட்டது. அப்போது தனசேகர் தனக்கு விருப்பமான படத்தை திரையிடக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து சிசிடிவி கேமராவை உடைத்து வார்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News December 13, 2025
கடலூரில் வீட்டின் கதவை உடைத்து ரூ.1.95 லட்சம் திருட்டு

கடலூர், முதுநகரை சேர்ந்தவர் மனைவி பானுமதி(53). இவர் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கிவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டில் வைத்திருந்த ரூ.1.95 லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 13, 2025
கடலூர்: டிகிரி போதும்..! வங்கியில் வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: CLICK <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News December 13, 2025
கடலூர் மாவட்டத்தில் 393 வழக்குகள் பதிவு

கடலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக நடப்பாண்டில் இதுவரை 95 புகார்கள் பெறப்பட்டதில் 11 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. 84 புகார்கள் தொடர்பாக வழக்குகள் நடைபெற்று வருகிறது. மேலும் காவல் துறையின் மூலம் 2025 ஆம் ஆண்டில் குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் 393 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.


