News August 17, 2024
கடலூர் கலெக்டர் கடும் எச்சரிக்கை

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கலாம் என்ற தவறான பதிவுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே சமூக வலைதளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News October 13, 2025
கடலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் நாளை (அக்.14) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகராட்சி அலுவலக வளாகம், கம்மாபுரம் வட்டாரம், அரசகுழி அருமை மகால், குமராட்சி வட்டம், உசுப்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஸ்ரீனிவாசா திருமண மண்டபம் மற்றும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 13, 2025
கடலூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் காலியாக உள்ள 1096 அலுவலக உதவியாளர், ஆலோசகர், சிறப்பு கல்வியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th,12th, UG/PG, B.E/B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது குறுகிய பட்டியல் (Shortlisting)மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு <
News October 13, 2025
கடலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் நாளை (அக்.,14) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீமுஷ்ணம் வட்டம், காவனூர், காந்தி கலை நிலையம் உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, பண்ருட்டி நகராட்சி, திருவதிகை, எஸ்.வி திருமண மண்டபம், கடலூர், மணிப்பிள்ளை திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.