News August 17, 2024

கடலூர் கலெக்டர் கடும் எச்சரிக்கை

image

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கலாம் என்ற தவறான பதிவுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே சமூக வலைதளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News September 13, 2025

கடலூர்: நலவாழ்வுத் துறையில் வேலை

image

கடலூர் மாவட்ட தேசிய நல்வாழ்வு குழுமத்தின் கீழ் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலியாக உள்ள 9 பணியிடங்கள் தற்காலிமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு சம்பளமாக ரூ.15,000 வழங்கப்படும். இதற்கு டிப்ளமோ பார்மசி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பதை பதிவிறக்கி, மாவட்ட சுகாதார அலுவலகத்தில் இன்று மாலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.

News September 13, 2025

கடலூர்: உணவு சரியில்லையா? இதை பண்ணுங்க!

image

கடலூர் மக்களே, ஜூலை.1 முதல் உணவுப் பாதுகாப்பு புகார்களுக்கான வாட்ஸ்அப் எண் (9444042322) தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் உணவின் தரம், கலப்படம் குறித்த புகார்களை, அந்த எண்ணிற்கு பதிலாக ‘TN Food Safety Consumer App’ மூலம் தெரிவிக்கலாம் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும் அறிய கடலூர் மாவட்ட உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலகத்தை அணுகலாம். SHARE பண்ணுங்க!

News September 13, 2025

கடலூர்: ரூ.47 லட்சம் மோசடி செய்தவர் கைது

image

நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டீஸ்வரம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் சக்திவேல் (63). இவர் அதே பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரிடம் கடந்த ஆண்டு தீபாவளி சீட்டு நடத்துவதாக கூறி ரூ.47 லட்சம் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர்களுக்கு தீபாவளி சீட்டு கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். இது குறித்து கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து சக்திவேலை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!