News August 17, 2024

கடலூர் கலெக்டர் கடும் எச்சரிக்கை

image

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கலாம் என்ற தவறான பதிவுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே சமூக வலைதளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News November 15, 2025

கடலூர்: பேங்க் வேலை அறிவிப்பு

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ரூ.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும். படித்து முடித்து விட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இது அற்புத வாய்ப்பாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். SHARE!

News November 15, 2025

கடலூர்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு நாளை(நவ.16) அன்று நடைபெறுகிறது.இதில், கடலூர் மாவட்டத்தில் 5 மையங்களில் முற்பகலில் 509 பேரும், பிற்பகலில் 509 பேர்களும் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையத்தில் எந்த ஒரு மின்னணு சாதனத்தையும் கொண்டு வரக்கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

News November 15, 2025

கடலூர்: வாலிபர் மீது போக்சோ வழக்கு

image

நத்தமேடு, செட்டிகுளத்தை சேர்தவர் சீதாராமன்(30). இவர் 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஜூன் மாதம் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இதனால் அந்த சிறுமி 4 மாதமாக கர்ப்பமானார் இது குறித்து ஊர் நல அலுவலர் அருளரசி சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சீத்தாராமன் மீது நேற்று போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!