News March 19, 2024
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

மக்களவை தேர்தலையொட்டி, நாளை வேட்பு மனு தாக்கலுக்கான பணிகள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் வரும் கட்சி நிர்வாகிகளுக்கு அலுவலகத்திற்கு செல்ல அனுமதி கிடையாது; வாகனங்களை 100 மீட்டர் தூரத்தில் நிறுத்த வேண்டும்; இதனால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீ. தூரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு கோடு போடும் பணி நேற்று நடந்தது.
Similar News
News December 6, 2025
கடலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிசம்பர் 13-ம் தேதி, மங்களுர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
கடலூர்: லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா திருத்தம் செய்வதற்கு, வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் திருமுட்டம் கிராமத்தைச் சேர்ந்த நேரு என்பவரிடம் ரூ.15,000 லஞ்சமாக கேட்டுள்ளார். இந்நிலையில் லஞ்சம் தர விரும்பாத அவர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
News December 6, 2025
கடலூர்: ரயில் மோதி கல்லூரி மாணவன் பலி

காடாம்புலியூரை அடுத்த காட்டாண்டிக்குப்பத்தை சேர்ந்த பழனிசாமி மகன் சக்தி நாதன் (22). தனியார் கல்லூரியில் படித்து வந்து இவர் நேற்று பண்ருட்டி அருகே விழாமங்கலத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த ரயில் மோதியதில், சக்திநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


