News January 22, 2025
கடலூர் ஆட்சியர் இன்றைய சுற்றுப்பயண விவரம்

கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையில் இன்று (22.01.2025) கடலூர் அண்ணா சந்தை, கடலூர், மஞ்சக்குப்பம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, வெள்ளி கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் மற்றும் செம்மண்டலம் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவிகளுக்கு கட்டப்பட்டு வரும் விடுதி ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
Similar News
News October 19, 2025
கடலூர்: கரண்ட் கட்டா? ஒரு Phone போதும்!

கடலூர் மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 19, 2025
கடலூர்: அனுமதி இன்றி பட்டாசு விற்றவர் கைது

நடுவீரப்பட்டு பகுதியில் அரசின் அனுமதி இன்றி கடைகளில் பட்டாசு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் இன்று (அக்.19) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுமார் ரூ.10,000 மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, விற்பனையில் ஈடுபட்ட பிரபாகரன் (54) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
News October 19, 2025
கடலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்!

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கும் நேரங்களில் மக்கள் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்காமல் தவிர்ப்பது நல்லது.