News August 27, 2024

கடலூர் ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

image

கடலூர் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘கடலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய இ.டி.பி.சி இணையத்தில் வரும் கே.எம்.எஸ் 24-25 கொள்முதல் பருவம், செப்.1 ஆம் தேதி முதல் துவங்குகிறது. இதில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் விவசாயிகள் தொடர்புடைய கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்து கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 10, 2025

கடலூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில்,<> http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

News December 10, 2025

கடலூர் எஸ்.பி.க்கு நினைவு பரிசு வழங்கல்

image

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கடந்த 2005 ஆம் ஆண்டு திருக்கோவிலூர் டி.எஸ்.பி. ஆக பணிபுரிந்த போது பவாரியா குற்றவாளிகளை பிடிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இதையடுத்து தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்த கடலூர் எஸ்.பி. ஜெயக்குமாரை, பூவானிக் குப்பம் அரசு பள்ளியில் கடந்த 1981- 82-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் நேற்று சந்தித்து நினைவுபரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

News December 10, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழக அரசின் 2026-ம் ஆண்டுக்கான “கபீர் புரஸ்கார்” விருது ஆண்டுதோறும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. சமுதாய நல்லிணக்கத்தை காப்பதற்காக சிறப்பாக செயல்புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருதை பெற விரும்புவோர் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும் டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!