News April 15, 2024
கடலூர் அருகே போலீஸார் அதிரடி

விருத்தாசலம் அடுத்த தொரவளூர் பகுதியில் எஸ்.பி. தனிப்படை போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி அதில் சோதனை செய்தனர். அதில் 26 குடங்களில் 250 லிட்டர் பனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்து மோகன் (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 11, 2025
கடலூர்: நகைக்காக கழுத்தை நெரித்து மூதாட்டி கொலை

சிதம்பரம் அருகே நத்தமேடு கிராமத்தை சேர்ந்த சந்திரா (60) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து மருதூர் போலீசார் நடத்திய விசாரணையில், அதே கிராமத்தை சேர்ந்த பசுபதி (27) என்பவர், மூதாட்டி அணிந்திருந்த 2½ பவுன் நகைக்காக வீட்டில் தனியாக வசித்து வந்த அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
News July 11, 2025
கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் (ஜூலை 10) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 10, 2025
கடலூர்: விபத்து தொடர்பாக 11 பேரிடம் விசாரணை தொடக்கம்

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்து சம்பவத்தில் கைதான கேட் கீப்பர் உட்பட 11 பேரிடம் தனித்தனியே விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சி ரயில்வே கோட்ட மூத்த துணை பாதுகாப்பு அதிகாரி மகேஸ்குமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் விபத்து நடப்பதற்கு முன் கொடுக்கப்பட்ட தகவல்கள், விபத்து நடந்ததும் வந்த முதல் தகவல் குறித்து விசாரணை நடைபெறுகிறது.