News April 15, 2024
கடலூர் அருகே போலீஸார் அதிரடி

விருத்தாசலம் அடுத்த தொரவளூர் பகுதியில் எஸ்.பி. தனிப்படை போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி அதில் சோதனை செய்தனர். அதில் 26 குடங்களில் 250 லிட்டர் பனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்து மோகன் (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 21, 2025
கடலூர்: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க!
News December 21, 2025
கடலூர்: பாட்டிலுக்கு ரூ.10; புதிய திட்டம் அமல்

கடலூர் மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களை, காலியாகிய பின் அதே டாஸ்மாக் கடையில் திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டம் நாளை (டிச.22) முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக மது பாட்டில்களை வாங்கும் போது கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு, காலி பாட்டிலாக அதே கடையில் ஒப்படைக்கும்போது அந்த தொகை திரும்ப வழங்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 21, 2025
கடலூர்: கிரைண்டர் வாங்க ரூ.5,000 !

தமிழக அரசு சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை முன்னேற்றும் வகையில் கிரைண்டர் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியம் வழங்கப்படும். இதற்கு 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கடலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வருமானச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். SHARE !


