News April 15, 2024

கடலூர் அருகே போலீஸார் அதிரடி 

image

விருத்தாசலம் அடுத்த தொரவளூர் பகுதியில் எஸ்.பி. தனிப்படை போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி அதில் சோதனை செய்தனர். அதில் 26 குடங்களில் 250 லிட்டர் பனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்து மோகன் (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 22, 2025

கடலூர் மாவட்டத்தில் 4,863 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

image

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து வேளாண்மை உதவி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஒன்றிணைந்து சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கணக்கெடுப்பு பணியின் நிறைவில் 4,406 ஏக்கர் நெற்பயிர்கள், 457 ஏக்கர் மக்காச்சோளமும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News December 22, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள், கூட்டறவு சங்கம் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள், விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். 25 பால் உற்பத்தியாளர்கள் அல்லது விவசாயிகள் ஒன்றிணைந்து, கூட்டுறவு சங்கம் அமைக்க செம்மண்டலத்தில் உள்ள கூட்டுறவு துணை பதிவாளர் (பால்வளம்) அலுவலகத்தை, தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News December 22, 2025

கடலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை!

image

கடலூர் மாவட்டத்தில் நாளை (டிச.23) பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் சேத்தியாத்தோப்பு, புவனகிரி, சோழதரம், ஒரத்தூர், ஒறையூர், பின்னலூர், நெல்லித்தோப்பு, சாத்தப்பட்டு, கீழாம்பட்டு, வடக்குத்து, இந்திரா நகர், வடலூர், குறிஞ்சிப்பாடி, வளையமாதேவி, பு.ஆதனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி மின்விநியோகம் இருக்காது.

error: Content is protected !!