News April 15, 2024
கடலூர் அருகே போலீஸார் அதிரடி

விருத்தாசலம் அடுத்த தொரவளூர் பகுதியில் எஸ்.பி. தனிப்படை போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி அதில் சோதனை செய்தனர். அதில் 26 குடங்களில் 250 லிட்டர் பனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்து மோகன் (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 12, 2025
கடலூர்: Apply பண்ணா போதும்.. வேலை ரெடி!

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 12, 2025
கடலூர்: ஆம்லெட் கிடைக்காததால் தற்கொலை!

நெல்லிக்குப்பம், திருகண்டேஸ்வரத்தைச் சேர்ந்தவர் சலவை தொழிலாளி செந்தில்குமார் (49). இவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்தபோது மனைவியிடம் ஆம்லெட் போட்டு தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் ஆம்லெட் போடாததால் விரக்தி அடைந்த அவர், தற்கொலைக்கு முயன்று, ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 12, 2025
கடலூர்: டிராக்டர் வாங்க 50% மானியம்!

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…


