News April 15, 2024
கடலூர் அருகே போலீஸார் அதிரடி

விருத்தாசலம் அடுத்த தொரவளூர் பகுதியில் எஸ்.பி. தனிப்படை போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி அதில் சோதனை செய்தனர். அதில் 26 குடங்களில் 250 லிட்டர் பனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்து மோகன் (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 25, 2025
கடலூர்: இனி பட்டா பெறுவது ஈசி!

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை லஞ்சம் கொடுக்காமல் ஆன்லைனில் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News December 25, 2025
9 தொகுதிகளில் 13088 வாக்காளர்கள்; ஆட்சியர் அறிவிப்பு!

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்கள் விவரத்தை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார். அதன்படி திட்டக்குடி 3103, விருத்தாசலம் 2207, நெய்வேலி 1798, பண்ருட்டி 2657, கடலூர் 1352, குறிஞ்சிப்பாடி 2617, புவனகிரி 2008, சிதம்பரம் 1514, காட்டுமன்னார்கோவில் 2323, மொத்தம் 19579 பேர் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
திட்டக்குடி கோர விபத்து; ஓட்டுநர் கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே 2 கார்கள் மீது அரசு பேருந்து மோதிய கோர விபத்தில் பெண் குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பேருந்தை இயக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மதுரை ஒத்தக்கடைப் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் தாஹா அலி என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.


