News April 15, 2024
கடலூர் அருகே போலீஸார் அதிரடி

விருத்தாசலம் அடுத்த தொரவளூர் பகுதியில் எஸ்.பி. தனிப்படை போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி அதில் சோதனை செய்தனர். அதில் 26 குடங்களில் 250 லிட்டர் பனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்து மோகன் (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 23, 2025
கடலூர்: திருமணம் செய்ய மறுத்தவர் மீது வழக்கு!

ஆண்டிமடத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் தனது பாட்டி வீட்டில் தங்கி படிக்கும்போது, மேல் பாப்பனப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத்(27) என்பவர் அந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தவறாக நடந்துள்ளார். பின்னர் வெளிநாடு சென்றுவிட்டு தற்போது ஊருக்கு வந்த அவர் திருமணம் செய்ய மறுத்ததால், நெய்வேலி மகளிர் காவல் நிலையத்தில் பெண் கொடுத்த புகாரில் வினோத் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.
News December 23, 2025
கடலூர்: கார்கள் மோதி விபத்து-இருவர் பலி!

ரெட்டிச்சாவடி அடுத்த கிளிஞ்சிகுப்பத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (63). இவர் உறவினர் 6 பேருடன் நேற்று உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு காரில் மேல்அழிஞ்சிப்பட்டு பகுதியில் சென்றபோது அவ்வழியாக வந்த காரும், இவர்கள் சென்ற காரும் நேருக்கு நேர் மோதின. இதில் புஷ்பராஜ் மற்றும் மஞ்சுளா(42) என்பவரும் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 22, 2025
கடலூர்: அதிசய கிணறு கொண்ட பெருமாள் கோயில்!

கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் தேவநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆதிசேஷன் கிணறு உள்ளது. பெருமாளுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டபோது, ஆதிசேஷன் தன் வாலால் பூமியைப் பிளந்து, நீரூற்றை ஏற்படுத்தி பெருமாள் தாகத்தை தணித்தார் என சொல்லப்படுகிறது. இந்த கிணறு இன்றும் கோயிலில் உள்ளது. இது ஒரு பிரார்த்தனை கிணறாகவும் கருதப்படுகிறது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.


